பஞ்சாபில் கல்வி துறையில் காலியாக உள்ள 10,880 பணியிடங்களை நிரப்ப முதல்-மந்திரி ஒப்புதல்

பஞ்சாபில் கல்வி துறையில் காலியாக உள்ள 10,880 பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் வழங்கி உள்ளார்.

Update: 2021-11-29 20:41 GMT

சண்டிகார்,

பஞ்சாபில் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  இந்த நிலையில், கல்வி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது பற்றிய அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தின் முடிவில், பஞ்சாபின் கல்வி துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 10,880 பணியிடங்களை நிரப்புவதற்கு அவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.



மேலும் செய்திகள்