தனியார் துறை வேலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அமல் - அரியானா அரசு அதிரடி

தனியார் துறையில் வேலைவாய்ப்பில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரியானாவில் அமலுக்கு வந்தது.

Update: 2022-01-17 06:37 GMT
சண்டிகர்,

தனியார் நிறுவனங்களில் வேலையில் உள்ளூரை சேர்ந்த இளைஞர்களுக்கு 75 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையிலான சட்டத்தை அரியானா அரசு அமல்படுத்தியுள்ளது.

இதன் மூலம், அம்மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களில் 75 சதவிகித வேலைகள் இனி அரியானாவை சேர்ந்த இளைஞர்களுக்கே வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வரும் வேலைகளில் தனியார் நிறுவனங்களில் உள்ள பணிகளுக்கு அரியானாவை சேர்ந்த இளைஞர்களுக்கே இனி வழங்கப்பட உள்ளது.

அரியானாவை சேர்ந்த இளைஞர்களுக்கு மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் துறையில் 75 சதவிகித வேலை வழங்கும் மசோதா 2020-ம் ஆண்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

அந்த ஒப்புதலை தொடர்ந்து மசோதா தற்போது சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அரியானாவில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களில் இனி அம்மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் 75 சதவிகிதம் பேர் வேலை வாய்ப்பு பெரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்