மராட்டிய கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது;
மும்பை,
மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மராட்டியத்தில் ,தற்போது பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது .