பவுர்ணமி, தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

பவுர்ணமி, தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-04 22:23 GMT

கோப்புப்படம்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக கடந்த 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே பருவநிலை மாற்றம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 3, 4 ஆகிய தேதிகளில் சதுரகிரி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்