கணவர் வீட்டு முன் மகளுடன் பெண் தர்ணா

கணவர் வீட்டு முன் மகளுடன் பெண் தர்ணா நடத்தினார்.;

Update:2022-09-16 22:03 IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூரு (மாவட்டம்) டவுன் வித்யாநகர் பகுதியில் வசித்து வந்தவர் ஜிதேந்திர குமார். இவர் தொழில் அதிபர் ஆவார். இவரது குடுபத்துக்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்று அப்பகுதியில் உள்ளது. இந்த நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 2½ வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜிதேந்திர குமார் உடல்நலக்குறைவால் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து மஞ்சுளாவை வீட்டை விட்டு ஜிதேந்திர குமாரின் குடும்பத்தார் விரட்டியடித்தனர். அவர் தனது கணவர் வீட்டுக்கு செல்ல முயன்றும் அவர்கள் தடுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த அவர் தனது மகளுடன் நேற்று ஜிதேந்திரகுமாரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்