வாட்ஸ்அப் சேவை முடக்கம்: விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ்
இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியதற்கான காரணத்தை விளக்க மெட்டா இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.;
Image Courtesy: PTI
புதுடெல்லி,
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடந்த 25-ந் தேதி வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக வாட்ஸ் அப் சேவை முடங்கியதால் செய்திகளை பரிமாற முடியாமல் பயனாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
தொழிநுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியானது. வாட்ஸ்அப் சேவை முடங்கியதை உறுதி செய்த நிறுவனம் 2 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சினையை சரிசெய்தது.
இந்த நிலையில், இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியதற்கான காரணத்தை விளக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வாட்ஸ்அப் சேவை முடங்கியதற்கான காரணத்தை விளக்கி, விரிவான அறிக்கை சமர்பிக்க மெட்டா இந்தியா நிறுவனத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.