எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ராஜஸ்தானில் பெட்ரோல் டீலர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என பெட்ரோல் டீலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2024-03-10 16:14 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கண்டித்து அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெட்ரோல் டீலர்கள் சங்கத்தினர் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வேலைநிறுத்தம் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என பெட்ரோல் டீலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதன்படி ராஜஸ்தானில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய பெட்ரோல் டீலர்கள் சங்கத்தினரின் வேலைநிறுத்தப் போராட்டம், அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்