ஜாவேரி பஜாரில் சோதனை; 8 கிலோ கடத்தல் தங்கம், ரூ.1¼ கோடி ரொக்கம் பறிமுதல்

ஜாவேரி பஜாரில் நடத்திய சோதனையில் 8 கிலோ கடத்தல் தங்கம், ரூ.1¼ கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-10-16 19:45 GMT

மும்பை, 

ஜாவேரி பஜாரில் நடத்திய சோதனையில் 8 கிலோ கடத்தல் தங்கம், ரூ.1¼ கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜாவேரி பஜாரில் சோதனை

தங்க கடத்தல் கும்பலை பிடிக்கும் வகையில் வருவாய் புலனாய்வு இயக்குனரக பிரிவினர் (டி.ஆர்.ஐ.) மும்பை ஜாவேரி பஜாரில் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் அதிரடி சோதனை நடத்தினர். முதலில் சோதனை நடத்திய இடத்தில் இருந்து அதிகாரிகள் ஒரு கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். அந்த தங்க கட்டி வைத்திருப்பதற்கான ஆவணம் அங்கு இருந்தவர்களிடம் இல்லை.

தங்கம், ரூ.1.22 கோடி பறிமுதல்

அங்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் மற்றொரு இடத்தில் சோதனை நடத்தினர். அங்கு இருந்து 7 கிலோ வெளிநாட்டு தங்க கட்டிகள், ரூ.1.22 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் கடத்தி வரப்பட்டது என தெரியவந்தது. இதேபோல பறிமுதல் செய்யப்பட்ட பணம் கடத்தல் தங்கம் விற்பனை செய்ததில் கிடைத்தது என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் ஒருவரை கைது செய்தனர். அவர் தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்