பூக்களை புரிந்துகொள்வோம்...
தாவரங்களின் முக்கியமான இனப்பெருக்க உறுப்பு, பூக்கள். ஒரு தாவரத்தை ஆணா? பெண்ணா? என்று அடையாளப்படுத்துவதும் பூக்களே.;
ஆண்பால் மலர்கள், பெண்பால் மலர்கள், இருபால் மலர்கள் என்று பூக்களில் மூன்று வகை உண்டு.
மகரந்ததாள்களை மட்டும் பெற்றவை. ஆண்பால் மலர்கள், சூலக வட்டத்தைப் பெற்றவை, பெண்பால் மலர்கள், இரண்டையுமே பெற்றவை இருபால் மலர்கள்.
பூக்களில், புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்ததாள், சூலக வட்டம் என நான்கு வட்டங்கள் காணப்படும். இவை நான்கும் பெற்ற பூக்களையே, 'முழுமையான மலர்கள்' என்பர். இவற்றில் ஒரு சில வட்டங்கள் குறைந்து காணப்படின் அவை 'முழுமையற்ற மலர்கள்' என அழைக்கப்படும்.
பூக்களைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவிற்கு 'புளேரிகல்கள்' அல்லது 'ஆந்தோலாஜி' என்று பெயர்.
பூக்களின் நிறத்திற்குக் காரணம் 'குரோமோ பிளாஸ்ட்'
பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களில் பூக்கும் தாவர வகைகள், 'ஆர்கீட் தாவரங்கள்.
உலகின் மிகப்பெரிய மலர் சந்தை-நெதர்லாந்தில் உள்ள ஆல்ஸ்மீர்.
தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தை-கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில், மலர் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது.
அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு, போது, மலர், பூ, வீ, பொதும்பர், பொம்மல், செம்மல் ஆகியவை பூக்களின் பருவநிலை தமிழ்ப்பெயர்களாகும்.
சங்க இலக்கியத்தில், பழம்பெரும் புலவர் கபிலர் 99 பூக்களின் பெயர்களை பதிவு செய்துள்ளார்.
சேர மன்னர்கள் சூடியது 'பனம் பூ'
பாண்டிய மன்னர்கள் சூடியது 'வேப்பம்பூ'
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பூ '
குறிஞ்சிப்பூ'
குறிஞ்சிப்பூ, நீல நிறத்தில் பூத்துக்குலுங்கிய மலைப்பகுதிக்கு 'நீலகிரி' என்று பெயர் வந்தது.