காரில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தக்கலை அருகே காரில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2022-10-14 18:45 GMT

தக்கலை 

கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அதிகாரிகள் தக்கலை அருகே உள்ள மணலிக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து காரை துரத்தி ெசன்றனர். சிறிது தூரம் சென்றதும் டிரைவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார். பின்னர் அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது அதில் 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உடையார்விளை அரசு குடோனில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்