அரவைக்காக 1,000 டன் நெல்

நீடாமங்கலத்திலிருந்து ஈரோட்டுக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ெரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

Update: 2022-11-21 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் பாமணி மத்திய சேமிப்புக்கிடங்கு, சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை, மூவாநல்லூர், அசேஷம், தெற்குநத்தம், இடையர்நத்தம், ஆதனூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 1000 டன் எடை கொண்ட நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து நெல் அரவைக்காக ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்