12 மூட்டை நெல் எரிந்து நாசம்
அரக்கோணம் அருகே 12 மூட்டை நெல் எரிந்து நாசமானது.;
அரக்கோணத்தை அடுத்த நந்திவேடந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 45). இவர் தனது விவசாய நிலத்தில் விளைந்த நெற்பயிரை நேற்று முன்தினம் அறுவடை செய்து சுமார் 20 நெல் மூட்டைகளை நிலத்திலேயே வைத்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் அந்த பகுதியில் இருந்த காய்ந்த செடிகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது தீ மளமளவென எரிந்து நெல் மூட்டைக்கு பரவி அடுக்கி வைத்து இருந்த 12 மூட்டைகள் எரிந்து நாசமானது. இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.