18 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தக்கலையில் 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Update: 2023-04-18 18:45 GMT

தக்கலை, 

பத்மநாபபுரம் நகராட்சி சுகாதார அலுவலர் முத்துராமலிங்கம் தலைமையில் மேற்பார்வையாளர் மோகன் மற்றும் ஊழியர்கள் புலியூர்குறிச்சி, தக்கலை மெயின்ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட 18 கிலோ பிளாஸ்டிக் ெபாருட்கள், உணவை பார்சல் செய்வதற்கான பிளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 கடைகளுக்கு மொத்தம் ரூ.1,700 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனை தொடரும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்