தாய்-மகனை தாக்கிய 2 பேர் கைது

சின்னசேலம் அருகே தாய்-மகனை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-04 19:00 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அடுத்த பூசப்பாடி கிழக்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் ராஜா மனைவி பானுமதி (வயது 40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பூபதி (32) என்பவருக்கும் இடையே வழிப்பாதை பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பூபதி தனது ஆதரவாளர்கள் 4 பேருடன் பானுமதியின் வீட்டிற்கு சென்று பானுமதி, இவருடைய மகன் ராகுல் ராய் ஆகியோரை ஆபாசமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து பூபதி (32), 16 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்