மணல் அள்ளிய 2 பேர் கைது

கோபால்பட்டி அருகே ஓடையில் மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-01 16:58 GMT

கோபால்பட்டி அருகே உள்ள எல்லப்பட்டியை அடுத்த பனைப்பட்டி ஓடையில்  ஒரு டிராக்டரில் 2 பேர் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சாணார்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மணல் அள்ளி கொண்டிருந்தவர்களை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அவர்கள், எல்லப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 35), அஜய்ராஜ் (23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்