தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

வாணாபுரம் அருகே தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-26 00:15 IST

வாணாபுரம்

வாணாபுரம் அருகே உள்ள சின்னக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஸ்டாலின்(வயது 29). சம்பவத்தன்று தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் சுபாஷ்(22) என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக சுபாஷ் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர், இரும்பு கம்பியால் ஸ்டாலினை திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் சுபாஷ், வேலுசாமி(20) முருகன், இவரது மனைவி சின்னப்பிள்ளை ஆகிய 4 பேர் மீது பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ், வேலுசாமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்