கேபிள் வயர்களை பிடித்துக்கொண்டு கீழே விழுந்ததால் உயிர்தப்பினார்

ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த வங்கி ஊழியர் ஸ்டீபன் கேபிள் வயர்களை பிடித்துக்கொண்டு கீழே விழுந்ததால் உயிர்தப்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

Update: 2017-02-19 20:02 GMT
நேரில் பார்த்தவர்கள்

சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் நடந்த விபத்தில் சிக்கி சிவசண்முகம் என்பவர் இறந்தார். அவரது நண்பர் வங்கி ஊழியரான ஸ்டீபன் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிர் பிழைத்தது எப்படி? என்பது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியதாவது:-

நாங்கள் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது மேம்பாலத்தில் பயங்கர சத்தம் கேட்டது. உடனே நாங்கள் மேலே பார்த்தபோது மேம்பாலத்தில் இருந்து விழுந்த ஒரு நபர் வேகமாக தரையில் மோதி அங்கேயே இறந்துவிட்டார்.

கேபிள் வயர்கள்

இன்னொருவர் மேலே இருந்து விழுந்த வேகத்தில் அந்த பகுதியில் உள்ள கேபிள் வயர்களில் சிக்கியபடி கீழே விழுந்தார். அவர் கையில் சிக்கிய கேபிள் வயர்களை பிடித்தபடியே தரையை நோக்கி மெதுவாக விழுந்து 2 முறை உருண்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். கேபிள் வயர்களை பிடிக்காமல் இருந்தால் அவரும் தரையில் வேகமாக மோதி இறந்திருப்பார்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராமசாமி அய்யர் மேம்பாலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல ஒரு விபத்து நடந்துள்ளது. ஜீப்பில் வந்த ஒரு நபர் மேம்பால வளைவில் தடுப்பில் மோதி தூக்கிவீசப்பட்டார். இதில் அந்த நபர் பாலத்தில் இருந்து கீழே சென்றுகொண்டிருந்த ஒரு கார் மீது விழுந்து படுகாயம் அடைந்தார்.

மேலும் செய்திகள்