புதிய படங்களை இணையதளத்தில் வெளியிடும் பிரபல வலைதள நிர்வாகி கைது
புதிய படங்களை இணையதளத்தில் வெளியிடும் பிரபல வலைதள நிர்வாகி திருவல்லிக்கேனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
இது தொடர்பாக நடிகர் விஷால் கூறியதாவது:
இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும், பிரபல வலைதள நிர்வாகி திருவல்லிக்கேணியில் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவது தொடர்பாக இணையதள நிர்வாகி ஒருவர் பிடிபட்டுள்ளார். கைதானவர் எந்த இணையதளத்தை சேர்ந்தவர் என்பது விசாரணைக்கு பின் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.