திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அஜரான பிறகு பேட்டி அளித்த சரவணன் திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை என கூறினார்.

Update: 2017-11-22 06:28 GMT


சென்னை

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின், விசாரணை இன்று தொடங்கியது. விசாரணை ஆணைய அலுவலகத்தில் கூடுதல் ஆவணங்களுடன் திமுக பிரமுகர் டாக்டர் சரவணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டாக்டர் சரவணன் கூறியதாவது:-

திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில்  உயிரோட்டம் இல்லை.ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாளையும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகவுள்ளேன் . ஜெயலிதா கைரேகை தொடர்பான சந்தேகம் தொடர்பான கூடுதல் ஆவனக்கள் நாளை தாக்கல் செய்யப்படும் என கூறினார்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் ஜோசப் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக திருநாவுக்கரசர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ராம மோகன ராவிடம்  விசாரணை நடத்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜோசப் ஆறுமுகசாமியிடம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.

மேலும் செய்திகள்