ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
ஆர்.கே. நகர்,
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 5,339 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்துள்ளார். 2வது சுற்று முடிவில் 10,421 வாக்குகள் பெற்று, தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இதனால் 5,900 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.