முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். #KCPalanisamy #AIADMK

Update: 2018-03-16 13:59 GMT

சென்னை,



கே.சி. பழனிச்சாமி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார் என அதிமுக தெரிவித்து உள்ளது. 

 அதிமுகவில் இருந்து நீக்கப்படும் இரண்டாவது செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிச்சாமி ஆவார். 

கட்சியின் கொள்கைகள், குறிக்கோளுக்கும் முரண்பாடாக செயல்பட்டதாக நீக்கப்படுவதாக அதிமுக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்சியின் உறுப்பினர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்திருக்க கூடாது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்