12 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

இலங்கை கடற்படை இன்று கைது செய்த 12 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-05 16:03 GMT
கொழும்பு,

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை, மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச்சென்றனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12 ராமேஸ்வரம் மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்