11 வயது சிறுமி பலாத்காரம் சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

11 வயது சிறுமி பலாத்காரம் சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2018-07-18 11:42 GMT
சென்னை

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

விசாரணையின் போது குற்றவாளிகள் அடுத்தடுத்து கூறிய தகவல்களால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த குற்ற சம்பவத்தின் முதல் குற்றவாளியான 66 வயதான ரவிகுமார் என்ற நபர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டர் வேலை பார்த்தவர் ஆவார்.

இவர் இந்த வேலைக்கு வருவதற்கு முன், அதே பகுதியில் உள்ள பிரபலமான மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்துள்ளார். அதன் பின்னரே லிப்ட் ஆப்ரேட்டர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு வேலை பார்த்த போது பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைப்பதற்காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளையும் அதன் விவரங்களையும் தெரிந்து கொண்ட ரவிக்குமார்,  அந்த மருந்துகளையும்,  ஊசிகளையும் பயன்படுத்தி சிறுமியை பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்