ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2018-12-17 05:36 GMT
சென்னை,

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.  

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்ற போது, ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும்,  வரும் ஜனவரி 31-க்குள் வரைவு விதிமுறைகளை அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்