வேலூர்: கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
வேலூர் வாலாஜாப்பேட்டை சுங்கசாவடி அருகே நடைபெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
வேலூர்,
வேலூர் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. சென்னை நோக்கிச் சென்ற கார், லாரி மீது மோதியதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.