கோகுல இந்திராவின் தந்தை மறைவு: முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் துக்கம் விசாரிப்பு
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் துக்கம் விசாரித்தனர்.
சென்னை,
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் வயது முதிர்வால் மரணம் அடைந்து உள்ளார். அவரது மறைவை அறிந்த தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தார்.
அவருடன், அமைச்சர் தங்கமணியும் துக்கம் விசாரிக்க சென்றிருந்தார். இதேபோல, துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ஆகியோரும், கோகுல இந்திரா வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தனர்.