தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை; அதனை ஸ்டாலின் நிரப்பி விட்டார் -வைகோ
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை. அதனை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி விட்டார் என வைகோ தெரிவித்து உள்ளார்.
சென்னை
சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்பெண்ணையாற்றின் குறுக்கே 70 சதவீத அணை கட்டும் பணிகளை கர்நாடகம் முடித்துவிட்டது. ஆனால் இவ்விவகாரத்தில் முன்கூட்டியே தமிழக அரசு தேசிய பசுமை தீர்பாயத்தை அணுகாதது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
மேகதாது, ஹைட்ரோகார்பன் என அடுத்தடுத்து தமிழகத்தை பாதிக்கும் விவகாரங்களில் உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்காமல் உள்ளது.
வெற்றிடம் என்பது அறிவியல் பூர்வமாக கிடையாது. தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை. அதனை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி விட்டார். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும்.
உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் முயற்சியில் திமுக ஈடுபடவில்லை . அதிமுக தான் அதனை செய்து வருகிறது என்று வைகோ கூறினார்.