கனமழை காரணமாக திருச்சி, அரியலூர்,திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக திருச்சி, அரியலூர், திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-11-29 01:43 GMT
திருச்சி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், கனமழை காரணமாக திருச்சி, அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு  மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.  


மேலும் செய்திகள்