பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார் -அமைச்சர் ஜெயக்குமார்

பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசை விமர்சிக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

Update: 2020-01-14 06:58 GMT
சென்னை

சென்னை சைதாப்பேட்டை மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார். சட்டம்-ஒழுங்கு உட்பட பல்வேறு துறைகளில், தமிழ்நாடு  சிறந்து விளங்குவதாக மத்திய அரசு விருதுகள் அளித்து வரும் நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனின் புகார் ஏற்புடையது அல்ல.

மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் தமிழ்நாட்டை, மாநில அரசு நிர்வாகத்தை பாராட்டும் நிலையில், தவறான கருத்துகள் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய பாஜக அரசை எதிர்க்கிறாரா?  என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்று பாஜக மூத்த  தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்