கொரோனா எதிரொலி; நிவாரண நிதி அளிக்க முதல் அமைச்சர் வேண்டுகோள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரண நிதி அளிக்கும்படி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-27 10:44 GMT
சென்னை,

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.  ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  ஒருவர் குணமடைந்து உள்ளார்.

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் தருமாறு பொதுமக்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்