சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Update: 2020-07-06 05:52 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 68,254 ஆக உள்ளது. சென்னையில் மொத்தம் தற்போது வரை 24,890 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-  

கோடம்பாக்கம் மண்டலத்தில் 2837 பேர் 

அண்ணா நகர் - 2349 பேர் 

தேனாம்பேட்டை-2317 பேர் 

ராயபுரம் மண்டலத்தில் - 2416 பேர் 

தண்டையார்பேட்டை-2275 பேர்

திரு.வி.க. நகர்- 1858 பேர் 

அம்பத்தூரில் 1272 பேர்
 
வளசரவாக்கத்தில் 1264 பேர்

அடையாறு 1913 பேர் 

திருவொற்றியூரில்-1214 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்