சாத்தான்குளம் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் மரணம்
சாத்தான்குளம் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தார்.
மதுரை,
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டைக்கொலை வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் சாத்தான்குளம் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை(56) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். தந்தை மகன் கொலை வழக்கில் பால்துரை அப்ரூவராக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.