தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் தற்போது 52,929 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,059 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் தான் 4,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-
அரியலூர் 18 பேர்,
செங்கல்பட்டு 439 பேர்,
சென்னை 993 பேர்,
கோயம்புத்தூர் 294 பேர்,
கடலூர் 195 பேர்,
தருமபுரி 191 பேர்,
திண்டுக்கல் 40 பேர்,
ஈரோடு 31 பேர்,
கள்ளக்குறிச்சி 11 பேர்,
காஞ்சிபுரம் 371 பேர்,
கன்னியாகுமரி 114 பேர்,
கரூர் 45 பேர்,
கிருஷ்ணகிரி 6 பேர்,
மதுரை 139 பேர்,
நாகப்பட்டினம் 72 பேர்,
நாமக்கல் 69 பேர்,
நீலகிரி 15 பேர்,
பெரம்பலூர் 19 பேர்,
புதுக்கோட்டை 147 பேர்,
ராமநாதபுரம் 61 பேர்,
ராணிப்பேட்டை 254 பேர்,
சேலம் 380 பேர்,
சிவகங்கை 92 பேர்,
தென்காசி 99 பேர்,
தஞ்சாவூர் 22 பேர்,
தேனி 40 பேர்,
திருப்பத்தூர் 72 பேர்,
திருவள்ளூர் 407 பேர்,
திருவண்ணாமலை 123 பேர்,
திருவாரூர் 7 பேர்,
தூத்துக்குடி 156 பேர்,
திருநெல்வேலி 137 பேர்,
திருப்பூர் 9 பேர்,
திருச்சி 9 பேர்,
வேலூர் 57 பேர்,
விழுப்புரம் 95 பேர்,
விருதுநகர் 292 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.