தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 673 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-01-13 14:02 GMT
கோப்புப்படம்
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,28,287 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 6 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், 3 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,242 ஆக உயர்ந்துள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் இன்று 192 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,28,368 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 821 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், மாநிலம் முழுவதும் இதுவரை 8,09,392 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்