பொங்கல் விழா - துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தார்

Update: 2021-01-14 12:25 GMT
சென்னை

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா  தேசிய தலைவர் இன்று சென்னை வந்துள்ளார்.

சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பா.ஜனதா  மாநில தலைவர் முருகன் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 திட்டமிட்டபடி, சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலை சீமாத்தம்மன் நகா் பகுதியில் பிரம்மாண்ட பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

பொங்கல் விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறாா். இதன்பின்பு, விமானம் மூலம் இரவு 9 மணியளவில் டெல்லி செல்ல உள்ளாா்.

மேலும் செய்திகள்