நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா - டி.டி.வி.தினகரன் டுவீட்
நாளை மறுநாள் சசிகலா விடுதலையாகிறார் என்று டி.டி.வி.தினகரன் டுவீட் செய்துள்ளார்.
சென்னை,
டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி சசிகலா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்.
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 25, 2021
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 25, 2021