தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-01-26 13:57 GMT
சென்னை,

தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.  இதனால் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 35 ஆயிரத்து 803 ஆக உயர்வடைந்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப காலங்களாக குறைந்து வருகிறது.  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.  கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,325 ஆக உள்ளது.  கொரோனா பாதிப்புகளில் இருந்து இன்று 595 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 18 ஆயிரத்து 742 ஆக உயர்ந்து உள்ளது.  கொரோனா பாதிப்புகளுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,736 ஆக குறைந்து உள்ளது.

மேலும் செய்திகள்