தமிழகத்தில் 8,16,890 அளவிற்கு தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு செலுத்த போதிய கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

Update: 2021-07-02 23:54 GMT

சென்னை,

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறும்போது, தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 1,56,26,550 தடுப்பூசிகள் வந்து இருக்கும் நிலையில், 1,48,64,430 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 8 லட்சத்து 69 ஆயிரம் வரை தடுப்பூசிகள் வந்துள்ளன. இப்போது 8,16,890 அளவிற்கு தடுப்பூசி நம் கையிருப்பாக இருக்கிறது. இதனை வைத்து 2, 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்