காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 7 தலைவர்களை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

Update: 2021-07-28 12:17 GMT
கோப்புப்படம்
சென்னை, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்களை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிய போராட்டத்தில் வழக்குகளை வாபஸ் பெறுவதாக காவல்துறை கூறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்