தமிழ்நாடு காகித ஆலையில் கோடிக்கணக்கில் முறைகேடு ; 2 அதிகாரிகள் பணியிடைநீக்கம்

தமிழ்நாடு காகித ஆலையில் கோடிக்கணக்கில் முறைகேடு செய்த அதிகாரிகள் 2 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2021-07-31 07:22 GMT
கரூர்

கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கு வெளிநாடுளில் இருந்து டாலர் பரிவர்த்தனை மூலம் டன் கணக்கில் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கரி வாங்கியதில் கடந்த 4 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டும் முன்வைக்கப்பட்டது 

இதை தொடர்ந்து தமிழ்நாடு  காகித ஆலையில் கோடிக்கணக்கில் முறைகேடு செய்த அதிகாரிகள் 2 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை பொது மேலாளர் பாலசுப்ரமணியம், தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்