முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15-ம் தேதி திமுக முப்பெரும் விழா
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15-ம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
திமுக கட்சியின் முப்பெரும் விழா அக்கட்சி தலைவரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில்,"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா , 15-9-2021 புதன்கிழமை, மாலை 5.00 மணியளவில், காணொலி காட்சி வாயிலாக சென்னை, கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அப்போது, மாவட்டக் கழகச் செயலாளர்/ பொறுப்பாளர்கள், தத்தமது மாவட்டத்திற்குட்பட்ட இடத்தில் விழாவினை காணொலி காட்சி வாயிலாக காணும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.