புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-18 18:05 GMT
திருவள்ளூர்,

சென்னையில் பொன்னேரி, செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து 2,785 கன அடியாக அதிகரித்துள்ளது. 

இதையடுத்து புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவுக்கு ஏற்ப உபரிநீர் திறப்பு மாற்றியமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்