நகைக்காக பெரியம்மாவை கொலை செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

நகைக்காக பெரியம்மாவை கொலை செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2021-12-27 11:52 GMT
கோப்புப்படம்
கோவை,

கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் ரவி பிரகாஷ் (வயது 33). இவர் அதே பகுதியில் கணினி சென்டர் வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இவர் நடத்திய கணிணி சென்டர் நஷ்டம் அடைந்தது. கடந்த 2016-ம் ஆண்டு நகைக்கு ஆசைப்பட்ட இவர் தனது பெரியம்மா அருக்காணி என்பவரை கொலை செய்தார்.

இதுதொடர்பாக ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிப்பிரகாசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று மாலை இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ரவி பிரகாசுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்