பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியருக்கு வலைவீச்சு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியருக்கு வலைவீச்சு.

Update: 2021-12-29 21:55 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் (வயது 50) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்தில் 11-ம் வகுப்பிற்கு பாடம் எடுத்தபோது, வகுப்பறையில் ஒரு மாணவிக்கு கிறிஸ்டோபர் ஜெபக்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், அந்த மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். இதை அறிந்த தலைமை ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். மாணவியின் உறவினர்கள் திசையன்விளை போலீசில் நேற்று புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை பணி இடைநீக்கம் செய்து, நெல்லை திருமண்டல மேல்நிலைப்பள்ளிகளின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்