பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் திரும்பி வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் திரும்பி வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-13 14:58 GMT
சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்களாக இயக்கப்பட்ட 16 ஆயிரம் பேருந்துகளில் 5 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பரவல் காரணமாக வருகிற ஜனவரி 16-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பொங்கல் விடுமுறை முடிந்து, மக்கள் திரும்பி வர ஜனவரி 17-19  ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்