வேலூர் மாநகராட்சியின் மேயராக சுஜாதா ஆனந்தகுமார் தேர்வு...!

வேலூர் மாநகராட்சியின் மேயராக சுஜாதா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-03-04 09:23 GMT
வேலூர்,

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. தேர்தலில் வெற்ற பெற்றவர்கள் கவுன்சிலராக பதவியேற்று கொண்டர். 

இந்த நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் வேலூர் மாநகராட்சியின் மேயர் பதவிக்கு திமுக சார்பில் சுஜாதா ஆனந்தகுமார் என்பவர் போட்டியிட்டார்.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில்  இன்று நடந்த மேயர் தேர்தலில் சுஜாதா ஆனந்தகுமார் அதிக வாக்குகள் பெற்றதை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி மேயர் பதவியை அவர் அலங்கரித்து உள்ளார்.

பின்னர், நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு வேலூர் மேயர் பெறுப்பை சுஜாதா ஆனந்தகுமார் ஏற்றுக் கொண்டார். 

மேலும் செய்திகள்