குடும்ப தகராறில் மனைவியை வெட்டிவிட்டு தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்ட கணவன்; போலீசார் விசாரணை...!

மனைவியை வெட்டிவிட்டு தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-03-13 10:15 GMT
செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் திருமணி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 36). இவரது மனைவி ரேகா(30) இந்த தம்பதிகளுக்க ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

ராஜேசுக்கும் மனைவி ரேகாவுக்கு அடிக்கடி குடும்பத் தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் வழக்கம் போல் கணவன்,மனைவிகும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த கணவன் ராஜேஷ் வீட்டிலிருந்த அறிவாளால் மனைவி ரேகாவின் பின் கழுத்திலும், இடது கையிலும் வெட்டி கொல்ல முயன்று உள்ளார்.  ஆத்திரம் தனியாத கணவன் ராஜேஷ் காய்கறி  நறுக்கும் கத்தியை எடுத்து தனது கழுதத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவயிடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த கணவன், மனைவி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்