வீடு புகுந்து பட்டதாரி தாக்கப்பட்டார்

காரைக்காலில் பட்டதாரி வீடு புகுந்து தாக்கப்பட்டார் 4 பேரை போலீசார் வலவைீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-14 16:23 GMT
காரைக்காலை அடுத்த நிரவி அக்கரைகுளத்து தெருவைச் சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது32). பட்டதாரி. இவரும் காரைக்கால் கீழகாசாகுடியை சேர்ந்த வசந்தன் (36) என்பவரும் சேர்ந்து ஒரு அமைப்பை நடத்தி வந்ததாக தெரிகிறது. 
இந்தநிலையில், வசந்தன் தனது ஆதரவாளர்களுடன் மனோஜ்குமாரை அடித்து, உதைத்து, அவரிடம் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கிகொண்டு விரட்டி விட்டதாக தெரிகிறது.
அதன்பிறகு கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த மனோஜ்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் நிரவி போலீசார் வசந்தன் (37) அவரது நண்பர் பாலமுருகன்(36) உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்