தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

Update: 2022-04-22 14:30 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. நேற்று 39- பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று பாதிப்பு 50- ஐ தாண்டி அதிரவைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 

தமிழகத்தில்  மேலும் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் தொற்ற்று  பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 37- பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. சென்னையில் நேற்று 21 ஆக ஒருநாள் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.  

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 256-ல் இருந்து 286- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 27- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,025- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்