கோவை: பூங்காவில் விளையாடிய 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...!

கோவை அருகே பூங்காவில் விளையாடிய 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து உள்ளார்.

Update: 2022-04-25 07:15 GMT
வடவள்ளி,

கோவை வடவள்ளி தனியார் அப்பார்மென்டை பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ். இவரது மனைவி சுகன்யா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.  இவர்களது மகன் லட்சுமணன்(வயது11) தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில் லட்சுமணன் நேற்று இரவு அப்பார்மென்டில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு கீழே சென்ற மின்சார ஒயரில் தெரியாமல் மிதித்ததில் சிறுவனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் லட்சுமணனை அங்கிருந்தவர் மீட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து சிறுவன் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அப்பார்மென்ட் பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்